Sunday, 14 May 2017

ஹைகூ


    இதமாய் என் தோளைப் பற்றிய
 இறந்த நண்பனின் கை போல்
    இந்த இலையுதிர்கால வெயில்...

6 comments:

  1. ஹைகூ அருமை. நம் நண்பனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காயத்ரி

      Delete
  2. அருமை நண்பரே! மேலும் பல படைப்புகளுகு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தேவி

      Delete
  3. அருமை…..
    தோழமையின் ஸ்பரிசம்…கோடையின் மழை,அடை மழைக்கால வெய்யில்,பாசி படரும் மாசி நிலவு,இப்படி எத்தனையோ சொல்லலாம்……….
    இலையுதிர்காலத்தில் உதிரும் இலைகள் மற்ற இலைகளை விட மெல்லியவை....... அதிக குளிரும் குறைந்த பகலும் உடையது இலையுதிர் காலம்……..அதிக அன்பும்,குறைந்த ஆயுளும் உடைய நண்பனின் ஸ்பரிசம் இலையுதிர் கால வெய்யிலுக்கு ஒப்பானதுதான்……..கவிஞரின் அன்பே இங்கே கவிதையாய் இருக்கிறது……..
    தோழனே !
    என் கிளையை விட்டு
    புறப்பட்டு விட்டாய்
    பசுமையாக எத்தனை
    பெரிய சுமையைத் தந்துவிட்டாய்
    இலையுதிர் காலமாய்
    என் நண்பனே உனை இழந்தாலும்
    துளிர்த்துக் கொண்டே இருக்கிறது
    உன் நினைவுகள் என்னுள்ளே
    எத்தனை கவனமெடுத்தாலும்
    இலையுதிர்காலத்தின்
    ஆதிக்கத்தை நான்
    ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்……
    இயற்கை சிருஸ்டியின்
    பசுமை சித்திரமாக
    உயிர் ஒழுகக் குலுங்கும்
    மலர்களோடு
    என் உயிர் இருக்கும் வரை
    பூ பூத்து காயாகி கனியும்
    உன் நினைவுகள்
    காலம் காலமாக
    துளிர்த்து உதிர்ந்து
    உயிர்க்கும் ஆதிமரத்தின்
    வசந்த துளிர்ப்பிற்குள்
    உன்னை காண்கிறேன்
    தோழனே!

    ReplyDelete
  4. உற்ற தோழனின் மறைவால் என் நெஞ்சில் எழுந்த எண்ணங்களையெல்லாம் வார்த்தைகளாய் வார்த்தெடுத்து விட்டீர்கள்.ஒராயிரம் நன்றிகள் உரித்தாகுக.

    ReplyDelete