நடந்து செல்லும் நந்தவனம்!
வண்ணங்கள் வியக்கும் வானவில்!
ஆடை உடுத்திய அதிசயத் தென்றல்!
ஆகாயம் இறக்கி விட்ட அற்புத தேவதை!
செக்கச் சிவந்த செம்பருத்தி!
செம்மொழியாய் தித்திக்கும் செந்தேன்!
சேலை கட்டிய சோலைக்குயில்!
தமிழ் பேசி தவழ்ந்து வரும் நறுமணம்!
கண்களால் பேசும் காதல் காவியம்!
காலம் வரைந்த அழகுக் கோலம்
பிள்ளைமனம் கொண்ட வெள்ளைநிலா!
Good to read Karthi. The metaphors are nice. But stereotypical. You've read a lot, seen a lot and experienced a lot. Let your imagination have no boundaries and soar high.
ReplyDeleteThanks for the perfect feedback Vijai.Henceforth my imagination will have no boundaries.
Deleteதமிழில் பேசவே தயங்கும் காலத்தில் தமிழில் கவிதை எழுதிய தைரியத்திற்கு முதல் பாராட்டு. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையாட என்ற வரிகளை நிருப்பித்து இருக்கிறீர்கள்.உங்களின் வாசிப்பின் ருசியும்,உயரமும் அறிவேன்,எனினும் எந்த கவிஞனின் சாயலும் இல்லாமல் எளிய மொழியில் சுயமாய் உருவெடுத்திருக்கும் கவிதைக்கு பாராட்டு.தமிழின் நறுமணம் எட்டாத சிந்தனை,எந்த பெண்ணுக்கும் கிட்டாத வ்ர்ணனை.காவியமும்,ஓவியமும் படைத்திட்ட நீங்களும் பிரம்மனே,பிழையில்லா படைப்பு.எந்த மொழி கவிஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு மொழியாய் தனக்கு நெருக்கமானவர்களை உருவகிப்பது.உங்களவள் தமிழ் இருந்த பாத்திரமோ ஆண் விரும்பும் சாத்திரமோ........... அருமை கவிஞரே.அடுத்த கவிதையில் படிமங்களை இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஆகச் சிறந்த விமர்சனம்.மிக்க நன்றி!
ReplyDelete