சமீபத்தில் ஒரு நண்பரின் திருமண
விழாவுக்குச் சென்றிருந்தேன்.அங்கு பாடிய சிறுமி ஒருத்தி தன் அற்புதமான கொஞ்சும்
குரலில் வந்திருந்தவர்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டாள்.அன்றைய நாள்
முழுவதும்...நமக்கொரு பெண்குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுப்
போய் விட்டாள்.இயல்பான உறவில் பெண்ணே comfortable ஆக
இருக்க ஆண் குழந்தைக்காகத் தவமிருக்கும் பெற்றோரை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.இயற்கையின்
படைப்பில் உச்சம் பெண் தான்.ஆனால் பெண்ணைப் பெண்ணுக்குரிய இயல்பான குணங்களுடன்
இருக்க விடுவதில்லையே...? ஏன்? ஒன்று பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் முழங்க வேண்டும்
இல்லையென்றால் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு போன்ற குணாதிசயங்களுடன் திகழ வேண்டும்
என்றே எண்ணுகிறோம்.
வாழ்க்கையில் நம்மோடு நெடுந்தூரம் பயணிக்கக்கூடியவர்களைச் சந்திக்கும் புள்ளிகள் எப்போதும் ஆச்சர்யம் நிறைந்தது. ஸ்ரீலங்காவிற்கு ஒரு கருத்தரங்கத்திற்காகச் சென்றிருந்தபோது அறிமுகமானவள் தேவி. கருத்தரங்கு செம்மையுற நடைபெறுவதற்கும், என் பேச்சு சிறப்புற அமைவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தாள். நாளடைவில் என் வாழ்வில் தவிர்க்க முடியாத தோழியானாள்.
ஆழ்ந்து சிந்தித்து...தெளிவான உச்சரிப்பிலும்-மென்மையான குரலிலும்-வலிக்காத சொற்களிலும்-பேசும் அழகிலும் என்னை லயித்துப் போகச் செய்பவள் என் காதல் மனைவி.
என் பிறந்தநாளொன்றுக்கு பெங்களூரிலிருந்து விமானத்தில் பறந்து வந்து பிறந்தநாள் பரிசளித்து விட்டுச் சென்றாள் என் தோழி லதா.
ஆழ்ந்து சிந்தித்து...தெளிவான உச்சரிப்பிலும்-மென்மையான குரலிலும்-வலிக்காத சொற்களிலும்-பேசும் அழகிலும் என்னை லயித்துப் போகச் செய்பவள் என் காதல் மனைவி.
என் பிறந்தநாளொன்றுக்கு பெங்களூரிலிருந்து விமானத்தில் பறந்து வந்து பிறந்தநாள் பரிசளித்து விட்டுச் சென்றாள் என் தோழி லதா.
என்னை விட என் தோழி ஜெயந்தி இரண்டு வாரம்
மூத்தவள் எனத் தெரிந்தவுடன் “அக்கா” எனக் கிண்டலாகக் கூப்பிடத்
துவங்கினேன். நாளடைவில் என் அக்காவாகவே மாறிப் போனாள்.
துளியும் சுயநலமின்றி...யார் என்ன உதவி கேட்டாலும் கனிவான உள்ளத்துடனும்,நெஞ்சார்ந்த அன்புடனும் செய்து...எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவள் கவிதா.
ஷார்ஜாவில் அறிமுகமான என் தோழி தீபா எப்போது என்னைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளே உணவு தயாரித்து எடுத்து வருவாள்.எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவ்வப்போது என்னை அழைத்து என் நலன் குறித்தறிந்தும்,பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும் கூறுவாள்.
துளியும் சுயநலமின்றி...யார் என்ன உதவி கேட்டாலும் கனிவான உள்ளத்துடனும்,நெஞ்சார்ந்த அன்புடனும் செய்து...எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவள் கவிதா.
ஷார்ஜாவில் அறிமுகமான என் தோழி தீபா எப்போது என்னைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளே உணவு தயாரித்து எடுத்து வருவாள்.எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவ்வப்போது என்னை அழைத்து என் நலன் குறித்தறிந்தும்,பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும் கூறுவாள்.
நான் கட்டுரை எழுதும் போதெல்லாம் படித்து
விட்டு விமர்சனம் செய்வார்கள் என் அன்புத் தங்கைகள் அனைவரும்.
மகளில்லாத குறையை தீர்த்து வைப்பவர்கள் நான் பெறாத மகள்கள் ராஜி,அஞ்சு, ஐஸ்வர்யா மற்றும் கிருத்திகா.
மகளில்லாத குறையை தீர்த்து வைப்பவர்கள் நான் பெறாத மகள்கள் ராஜி,அஞ்சு, ஐஸ்வர்யா மற்றும் கிருத்திகா.
இப்படி என் வாழ்வை இனிமையாக்கும்,கலர்ஃபுல்
ஆக்கும்,ஒளியேற்றும் பெண்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.என்னைச்
சுற்றியுள்ள,என்னைச் சார்ந்திருக்கிற பெண்களின் சின்னச்சின்ன ஆசைகளைப் பற்றி நான்
அறிந்து வைத்திருக்கிறேனா?அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவதில் என்
பங்கு என்ன?நம் மீது unconditional love வைத்து நமக்காக வாழ்கிற,உழைக்கிற,போராடுகிற
பெண்களின் ஏக்கமான குரல்கள் ஏன் நம் காதுகளை எட்டினாலும் உள்ளங்களைத்
தொடுவதில்லை?ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
“சமையலறையில் என் கண்களைக்
கட்டி விட்டாலும்
எந்தப் பொருளிலும் விரல் படாமல்
கேட்ட பொருளை கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று சவால்
விடவும் செய்கிறாள்
அங்கிருந்து...
அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று”
என்னும் கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதை
ஒன்றிருக்கிறது.உண்மை தான்.எத்தனையோ யுகங்களாக பெண் அடக்கி வைக்கப்பட்டுத்தான்
இருந்திருக்கிறாள்.அடக்கி வைக்கப்பட்ட பெண் சடாரென வெளியேறும் போது கொஞ்சம்
வேகமாக,கொஞ்சம் தூரமாகத் தான் போய் விழுவாள்.பெண் எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை- எந்த இதிகாசங்களையும் படைக்கவில்லை - எந்தச் சட்டமும் இயற்றவில்லை - எந்தத் தத்துவத்தையும் எழுதவில்லை - எந்தக் காலத்திலும் இறைத்தூதராக மனிதர்களுக்குப் போதனை செய்யவில்லை.அனைத்தையும் செய்தது ஆண் வர்க்கம் தான். அதனால் தான் என்னவோ எந்த மதமும், சாத்திரமும், சட்டமும் பெண்ணுக்கு ஆதரவாய் இல்லை.
"ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் ஏவாள். அவளால் தான், விலக்கப்பட்ட கனியை ஆதாம் புசித்தான். ஆணை மயக்கி அவனுக்கு வீழ்ச்சியை வழங்கியதால் பெண் அசுத்தமடைந்தாள். பாவங்களுக்கும் பெண்ணே பிறப்பிடம். நரகத்துக்கு அவள் தான் நுழைவாயில்" என்றது கிறித்துவம்.
"ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன. அவை பெண்கள் மீது ஆண்களுக்குள்ள சில உரிமைகளைப் போன்றவை. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களை விட ஒரு படி உயர்வு உண்டு" என்கிறது இஸ்லாம்.
"பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்" எனப் பெண்ணின் சுதந்திரத்திற்குத் தடைபோடுகிறது மனுஸ்மிருதி.
ஆக,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் கொடுமைகளுக்குப் பெண் ஆளாகியே வந்திருக்கிறாள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.கடந்த நூற்றாண்டில் இம்மண்ணில் தோன்றிய பெரியார் போன்ற சமூகச் சிந்தனையாளர்கள் பலர் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினர்.அதன் பயனாய் இன்று பெண்கள் சம உரிமை பெற்று விளங்குகிறார்கள்.
சங்க காலத்தில் பெண்ணும் ஆணுக்கு நிகராக கல்வியறிவு பெற்று விளங்கினாள்.ஆனால் இடைக்காலத்தில் மதவாதிகள் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி பெண்கள் கல்வி பெற முடியாமல் செய்தனர்.பெண்கள் அஞ்சி,அடங்கி,ஒடுங்கி வாழும் நிலை ஏற்பட்டது.இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது.விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகிவிடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தேசத்தின் சரிபாதி மக்களாக பெண்களின் நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய விஷயம். பெண்களின் சக்தி அளவிட முடியாதது.அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடைந்து விடுவார்கள்.”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்” என்றார் மகாகவி பாரதி.இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் படித்துப் பட்டம் பெற்றதுடன் – சட்டசபைகளிலும்,நாடாளுமன்றங்களிலும் இடம்பெற்று நாடாளும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.தொழில் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாங்கினைக் காண முடிகிறது. கிராமப்புற மகளிர் கூட மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கைத்தொழில்கள் செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சிறந்து விளங்கி நாட்டிற்கும்,வீட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர்.
"ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் ஏவாள். அவளால் தான், விலக்கப்பட்ட கனியை ஆதாம் புசித்தான். ஆணை மயக்கி அவனுக்கு வீழ்ச்சியை வழங்கியதால் பெண் அசுத்தமடைந்தாள். பாவங்களுக்கும் பெண்ணே பிறப்பிடம். நரகத்துக்கு அவள் தான் நுழைவாயில்" என்றது கிறித்துவம்.
"ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன. அவை பெண்கள் மீது ஆண்களுக்குள்ள சில உரிமைகளைப் போன்றவை. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களை விட ஒரு படி உயர்வு உண்டு" என்கிறது இஸ்லாம்.
"பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்" எனப் பெண்ணின் சுதந்திரத்திற்குத் தடைபோடுகிறது மனுஸ்மிருதி.
ஆக,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் கொடுமைகளுக்குப் பெண் ஆளாகியே வந்திருக்கிறாள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.கடந்த நூற்றாண்டில் இம்மண்ணில் தோன்றிய பெரியார் போன்ற சமூகச் சிந்தனையாளர்கள் பலர் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினர்.அதன் பயனாய் இன்று பெண்கள் சம உரிமை பெற்று விளங்குகிறார்கள்.
சங்க காலத்தில் பெண்ணும் ஆணுக்கு நிகராக கல்வியறிவு பெற்று விளங்கினாள்.ஆனால் இடைக்காலத்தில் மதவாதிகள் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி பெண்கள் கல்வி பெற முடியாமல் செய்தனர்.பெண்கள் அஞ்சி,அடங்கி,ஒடுங்கி வாழும் நிலை ஏற்பட்டது.இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது.விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகிவிடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தேசத்தின் சரிபாதி மக்களாக பெண்களின் நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய விஷயம். பெண்களின் சக்தி அளவிட முடியாதது.அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடைந்து விடுவார்கள்.”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்” என்றார் மகாகவி பாரதி.இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் படித்துப் பட்டம் பெற்றதுடன் – சட்டசபைகளிலும்,நாடாளுமன்றங்களிலும் இடம்பெற்று நாடாளும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.தொழில் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாங்கினைக் காண முடிகிறது. கிராமப்புற மகளிர் கூட மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கைத்தொழில்கள் செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சிறந்து விளங்கி நாட்டிற்கும்,வீட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர்.
இவ்வாறு பெண்
முன்னேற்றமானது பாராட்டுக்குரிய விஷயமாக இருப்பினும் பெண்ணியத்தைச் சில பெண்கள்
தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.பெண்ணியம்
என்பது சமூக அமைப்பில் பெண்ணுக்குரிய உரிமைகள் ஒடுக்கப்படுவதை எடுத்துரைப்பது.பெண்
பற்றிய புதிய கண்ணோட்டமும்,விழிப்புணர்வும் தான் பெண்ணியம்.இந்தப் புரிந்துணர்வு
இல்லாதவர்கள் வீட்டை எதிர்ப்பது,திமிராக நடந்து கொள்வது,எதைக் கேட்டாலும்
தெனாவட்டாகப் பதில் சொல்வது,முறைப்பிலேயே திரிவது என்பதையே பெண்ணியமாகக் கருதுகிறார்கள்.இன்னும்
சிலரோ அடுத்தவர் கதையைப் பேசி character assassination ம்
செய்கிறார்கள்.பெண்களைப் புனிதப்படுத்தி உயர்வான குணங்களை மட்டும் போற்றிப் பாராட்டித்
தியாகச்சுடராக உருவகப்படுத்தும் நாம் இது போன்ற குணங்களையும் கொஞ்சம் உளவியல்
ரீதியாக விவாதத்திற்கு உட்படுத்தினால் நல்லது.ஏனெனில் அப்படிப்பட்ட பெண்களையும்
நாம் சந்திக்கத் தான் செய்கிறோம் – வாழ்க்கை முழுக்க இப்படி முரண்பாடானவர்களும்
உடன் பயணிப்பார்கள் போல-என வருந்தத்தக்க அளவில்.”ஆணைப் புறக்கணித்து
விட்டு ஒரு பெண்ணால் எந்தத் தீவில் போய் வாழ முடியும்.ஆணும்,பெண்ணும் இணையாமல்
எந்த அற்புதங்களும் இங்கே சாத்தியம் இல்லை.” என்கிறார் எழுத்தாளர் ப்ரியா தம்பி தன்னுடைய
“பேசாத பேச்செல்லாம்” நூலில்.ஒவ்வொரு பெண் மட்டுமல்ல ஆணும் படிக்க வேண்டிய
அருமையான படைப்பு.ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் பெண்மனதைப் புரிந்து கொள்ள
விரும்பும் எவரும் வாசிக்க வேண்டியது.
நம் சமூகத்தில் பெண்ணுக்கானத் தீர்வென்பது
மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது மாதிரியான தீர்வுகள் தான்.என்னைப்
பொறுத்தவரை பெண் என்பவள் எந்த நிலையிலும் தன்னுடைய சுயமரியாதையையும்,சுதந்திர
உணர்வையும்,தனித்தன்மையையும்,Priorities ஐயும் விட்டுத்தரக் கூடாது.நம்
முன்னோர்களின் திறமைகள்,ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தும் DNA மூலமாக நம்மை அடைகின்றன.அவர்களில் எத்தனையோ
அறிவாளிகள்,சிந்தனாவாதிகள்,தத்துவவாதிகள் இருந்திருக்கிறார்கள்.நமக்குள்
மகாசமுத்திரமே இருக்கிறது.இது இருபாலருக்கும் பொருந்தும்.ஆகவே எதிர்மறை விமர்சனம்
செய்பவர்களை நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்கக்கூடாது.அவர்களால் உங்களை அறியாமல் ஒரு complex உருவாகி விடும். .”நீங்க
ரொம்ப அழகா இருக்கீங்கனு பொய் சொன்னேன்” என மொக்கை போடுபவர்களை எல்லாம் social network,real
life எல்லாவற்றிலிருந்தும்
block செய்து
விடுவது உத்தமம்.
சென்ற வாரம் கொல்லம் எக்ஸ்பிரஸில்
காலை 5 மணிக்கு கோவையிலிருந்து ஈரோடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன்.நான்
இருந்த Cabinல்
யாருமேயில்லை.ஆஹா! அதிகாலைக் காற்று,ஜன்னலோர ரயில்,MP4ல் ராஜா
பாட்டு என அடுத்த 2 மணி நேரத்தை ஆனந்தமாய் அனுபவிக்கலாம்
என்றெண்ணியபடி அமர்ந்தேன்...அந்த ரயில் பயணமே நாசமாகப் போவது தெரியாமல்.சற்று
நேரத்திற்கெல்லாம் திடீரென்று எங்கிருந்தோ 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தாள்.வந்தவள்
கீழே குனியவும் luggage எடுக்கிறாள் போலிருக்கிறது எனக் காலை
நகர்த்திக் கொண்டேன்.அவளோ டக்கென்று என் காலில் விழுந்து
வணங்கினாள்.அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன்.பார்த்தால் பிச்சை எடுப்பவள் போலவும்
தெரியவில்லை.சிரித்தபடி சென்று விட்டாள்.பின்னர் சில விநாடிகளிலேயே மறுபடியும்
வந்து காலில் விழுந்தாள்.இம்முறை கொஞ்சம் காசு கொடுத்தேன்.எந்தச் சலனமுமின்றி
வாங்கிக் கொண்டு சென்றாள்.உடனே திரும்பவும் வந்து காலில் விழுந்தாள்.எனக்கு
எரிச்சல் வந்தது.இது தொடர்கதையாகிக் கொண்டிருக்கவே நான் தூங்குவது போல் பாசாங்கு
செய்தேன்.இருப்பினும் அவள் என் காலில் விழுவதை நிறுத்தவேயில்லை.என் எரிச்சல்
கோபமாக மாறியது.ஒரு முறை காலில் விழ வரும் போது ‘போதும்’ எனக்
கடுப்புடன் சொன்னேன்.ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவள் மேலிருந்த கோபம்
அனுதாபமாக மாறியது.மனப்பிறழ்வுடைய அந்தப் பெண் எதனால் அப்படி ஆனாள்?எந்தச்
சூழ்நிலை அவளை அந்த நிலைக்கு உள்ளாக்கியது?ஏன் என் காலில் விழுந்து வணங்கிக்
கொண்டேயிருக்கிறாள்? என்று சிந்திக்கத் துவங்கினேன்.அவளிடம்,நீ யாரும்மா? எந்த
ஊர்? என்று கேட்டேன்.ஒன்றும் கூறாமல் சிரித்தாள்.நீ ஒழுங்கா வீடு போய்ச் சேரும்மா
என்றேன்.போய் விட்டாள்.பின் வரவேயில்லை.ஒரு பெண்ணை நம் சமுதாயம் எந்த நிலைக்கு
ஆளாக்கியிருக்கிறது என்றெண்ணி வருந்தினேன்.இந்தப் பெண் மட்டுமா?இன்னும் இவள் போன்ற
எத்தனையெத்தனையோ பெண்கள் சாலைகளில் திரிகிறார்கள்.வீடுகளிலும் கூட
இருக்கிறார்கள்.ஒரு பெண் இந்த உலகிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?அவளுக்கு என்ன தான்
தேவை? புரிஞ்சுக்கவே முடியலையே எனப் புலம்புபவர்களிடம் பகிர்தலும்,புரிதலும் தான்
பெண்ணுக்குத் தேவை எனச் சொல்லத் தோன்றுகிறது.
பெண்ணுக்குரிய இளகிய மனது ஆணுக்கு
ஏன் இல்லை?எந்தப் பெண்ணாவது காதலிக்க மறுத்த ஆணின் முகத்தில் ஆசிட்
அடித்திருக்கிறாளா? பிறகெப்படி ஆணால் மட்டும் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில்
ஆசிட் அடிக்க முடிகிறது?முதல் காதலனையோ/காதலியையோ தான் மணமுடிக்க வேண்டுமெனில்
இங்கு பெரும்பாலோருக்குத் திருமணமே ஆகியிருக்காது.என்றாலும் கூட நேசத்துக்குரியவர்
எங்கிருப்பினும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவது தானே அந்தக் காதலுக்கே
அழகு.அதை விடுத்து எனக்குக் கிடைக்காதவர் வேறு எவருக்குமே கிடைக்கக்கூடாது எனக்
கருதுவது மடமையல்லவா? தளபதி படத்தில் அரவிந்த்சாமியைக் கொல்லும் படி மம்மூட்டி
ரஜினியிடம் சொல்வார்.ரஜினி தயங்கவே,”ஓஹோ உன் நேசத்துக்குரியவள் இப்போது அவன்
மனைவி.அதனால் தானே மறுக்குற?” எனக் கேட்பார் மம்மூட்டி.என்ன ஒர் அருமையான காட்சி
அது.ப்ரணயம் என்ற மலையாளப் படத்தில் ஜெயப்ரதா தன் முன்னாள் கணவர் அனுபம்கெரை பல
ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பார்.பின்னர் மோகன்லாலைத் திருமணம் செய்திருந்த
ஜெயப்ரதாவுக்கு அனுபம்கெரை பார்த்த நொடியில் பழைய ப்ரியம் எட்டிப்
பார்க்கும்.’என்னை விட்டுட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல’ எனக்
காயப்படுத்தும்படி எதையும் அனுபம்கெர் கேட்க மாட்டார்.ஆச்சர்யம் என்னவென்றால்
மோகன்லால் மீதும் நட்போடு இருப்பார்.அவர்கள் மூவருக்குமிடையே மலரும் அழகான அன்பு
கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
உறவுகளைக் கையாள்வதில் பெண்கள்
திறமையானவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறவுகளைக் கையாண்ட அனுபவம் பெண்களிடம்
இருக்கிறது.இருப்பினும் நட்பைப் பொறுத்தவரை ஆணுக்குச் சாத்தியப்படுவது பெண்களுக்கு
மட்டும் எந்த வயதிலும் ஏன் சாத்தியப்படுவதே இல்லை?ஆண் சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள
முடியும் பெண்ணால் இன்னொரு பெண் சொல்வதை ஏன் ஏற்க முடியவில்லை?இந்த நவீன யுகத்தில்
கூட பெண்ணின் ஆத்மார்த்த நட்பு என்பது வெகு சில தான்.ஆண் தனது நண்பனுடன்
மணிக்கணக்கில் போன் பேச,நண்பன் டூர் ப்ளான் செய்தால் உடனே சேர்ந்து கொள்ள,நண்பனின்
கல்யாணத்துக்கு ஓடி ஓடி உழைக்க,நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால் எல்லாவற்றையும்
அப்படியே போட்டு விட்டு ஒடிப் போய் உதவி செய்ய...என எவ்வளவோ முடிகிறது.ஆனால்
பெண்ணுக்கு இதில் ஒன்றைச் செய்வதற்குக் கூட
முடிவதில்லை.காரணம்...சூழ்நிலையா?நேரமின்மையா?உரிமை மறுக்கப்படுகிறதா? பரந்த
பார்வையும்,சகப்பெண்களுக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலமும் ஓர் பெண்ணாலும் நட்பைக்
கொண்டாடவும்,தொடரவும் முடியும்.
வாழ்க்கை என்னை ரணப்படுத்தித் தோல்விகளைப் பரிசளிக்கும் போதெல்லாம் பெண்களே என்னைத்
தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். பெண்களாலேயே கவனப்படுகிறது
வாழ்க்கை...பெண்களாலேயே அர்த்தப்படுகிறது உலகம்...உண்மையில் பெண்ணின் அன்பிற்கு
முன்னால் எல்லாமும் தோற்றுப் போகிறது...எல்லாமும்...
.